Post Office இல் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுலவகம் தற்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த திட்டம் நாட்டு மக்களுக்கு பெரிதும் பயனாக இருக்கும் என்று அஞ்சல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்:
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து இருப்பவர்கள் கவனத்திற்குக்காகவும், தற்போது புதிதாக சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க இருப்பவர்களும் இந்த தகவலை கட்டாயமான முறையில் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் இந்திய அஞ்சல் அலுவலகம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் புதிதாக போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று பிளான் வைத்து இருந்தால் அவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் கொண்ட தொகுப்பு தான் இது. சேமிப்பு கணக்கு இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. தற்போதே பொதுமக்கள் சேமிப்பு கணக்கை துவங்கி விட்டால் அவர்களுக்கு பிற்காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் தற்போது சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. இது குறித்து ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.
சென்னை மாநகர பொது மக்கள் கவனத்திற்கு – போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது நீங்கள் செலுத்தும் டெபாசிட் பணத்தை இருமடங்காக எடுத்து கொள்ள ஒரு சிறந்த திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்கள் தனிநபராகவும் அல்லது இரண்டு பேர் இணைந்தும் முதலீடு செய்து கொள்ளலாம். அதை தொடர்ந்து, இந்த திட்டத்தில் முதலில் முதலீடு குறைந்தது ரூபாய் ஆயிரத்தில் ஆரம்பித்து கொள்ளலாம் என்றும் அதிகபட்ச தொகை வரம்பில் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த திட்டத்தில் கால அளவு முழுவதும் முதலீடு செய்து இருந்தால், 124 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். தபால் அலுவலகத்தில் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்தால் கூட்டு வட்டி கிடைக்கும். தற்போது, இந்தத் திட்டத்தில் முதலீட்டுக்கு 6.9% வட்டி கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் நாமினி வசதியும் உள்ளது. அதை தொடர்ந்து,இந்த திட்டதை நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு தபால் நிலையத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.