தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது 2500யை தாண்டிய கொரோனா கொரோனா பாதிப்பு காரணமாக, மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்து பல தளர்வுகள் வழங்கப்பட்டது. அதன் பின் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் தினசரி கொரோனா பாதிப்பு 2500யை கடந்துள்ளது. அதில் குறிப்பாக தலைநகரான சென்னையில் மட்டும் 50% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மீண்டும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. இருந்தாலும் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து பின் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.