தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு:

சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதன் துவக்க விழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த போட்டியானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச போட்டியில் 188 வெளிநாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த போட்டிக்கு 7 மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் 198 மருத்துவர்கள் 74 செவிலியர்கள் உட்பட 433 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜூலை 24 ஆம் தேதியான நேற்று தமிழக சதுரங்க வீரர்களை கொண்டு மாமல்லபுரத்தில் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றது. மேலும் செஸ் போட்டிகளை தவிர்த்து தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 2, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகைப்பதிவு – ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்!

செஸ் வீரர்கள் வரும் நேரத்தை பொறுத்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பல நாடுகளில் இருந்து வரும் போட்டியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் மாமல்லப்புரத்தில் பார்வையாளர்கள் வர போதிய வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!