முழு ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்தொற்று 2வது அலை பரவலை கருத்தில் கொண்டு உத்தரகண்ட் மாநில அரசு முழு ஊரடங்கு உத்தரவினை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது. அதன்படி வாரத்தில் 6 நாட்கள் சந்தைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினசரி 4 லட்சம் வரை புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டது. எனவே இதனை தடுக்கும் பொருட்டு மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தன. அந்தந்த மாநிலங்களில் உள்ள பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொற்று பரவல் குறைந்ததால் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்டா பிளஸ் வேரியண்ட் பரவத் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
தமிழக கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!
அதனை தொடர்ந்து உத்தரகண்ட் மாநில அரசு ஜூன் 28ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் அதாவது ஜூலை 8 வரை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது. இதில் ஜிம்கள், சந்தைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான அரசு இன்று கொரோனா ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி கட்டுப்பாடுகள் ஜூலை 5 காலை வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், உத்தரகண்டில் ஊரடங்கு உத்தரவை மாநில அரசு மேலும் தளர்த்தியுள்ளது, வாரத்தில் ஆறு நாட்கள் சந்தைகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது. புதிய வழிகாட்டுதலின் கீழ், உத்தரகண்ட் அரசு ஜிம்களை 50 சதவீத திறனுடன் மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதம் உத்தரகண்ட் மாநிலத்தில் முழுமையான கொரோனா ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், பொருளாதார பாதிப்புகளை சரி செய்வதற்காக மாநில அரசு ஊரடங்கில் தளர்வுகள் வழங்க தொடங்கியது.