தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு அமல் படுத்தபடுமா என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தான் தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. இதனால் மக்கள் இரண்டு ஆண்டிற்கு பிறகு சுதந்திரமாக பொது இடங்களில் நடமாட துவங்கினர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமோ என மக்கள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
சென்னை ஐஐடியில் தான் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதாவது தற்போது வரை ஐடிஐ யில் 111 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 7490 பேரில் 3080 பேருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தில் தான் இருக்கிறது. மீதமுள்ள 9 மாவட்டங்களிலும் மிகக் குறைவான அளவிலேயே மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு கோடியே 48 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர்.
TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
இதனால் கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதுள்ள கொரோனா பரவலின் நிலவரத்தின்படி மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. தற்போது வரை ஊரடங்கு அமல் படுத்துவதற்கான கட்டாயமும் இல்லை. ஊரடங்கு அமல் இருக்கிறது என பல வதந்திகள் பரவி கொண்டிருக்கும் வேளையில் மக்கள் யாரும் அதனை நம்பி பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவேளை கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்து விட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மருத்துவமனைகளில் மின்வெட்டும் ஏற்படாவண்ணம் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.