இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? எக்ஸ்.இ வகை வைரஸ் பரவல் எதிரொலி!

0
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? எக்ஸ்.இ வகை வைரஸ் பரவல் எதிரொலி!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? எக்ஸ்.இ வகை வைரஸ் பரவல் எதிரொலி!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? எக்ஸ்.இ வகை வைரஸ் பரவல் எதிரொலி!

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் ஓமைக்ரான் வைரஸை விட எக்ஸ்இ தொற்று குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முழு ஊரடங்கு

இந்தியாவில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வகையான ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனாவின் 3ம் அலை பரவத் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் வேகமாக பரவியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று பரிந்துரைத்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முதன்மை வங்கிகளின் வட்டி விகிதங்கள்!

அதன்படி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஒமைக்ரானின் உருமாற்ற அடைந்த புதிய வகை தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இந்த வைரஸ் ஓமைக்ரான் பரவலை விட அதிவேகமாக பரவ கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் எக்ஸ்.இ வகை தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Post Office இல் 20000 ரூபாய் தராங்களா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?

ஆனால் தற்போது இந்தியாவிலும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்தவருக்கு ஒமைக்ரான் திரிபான எக்ஸ்.இ வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக குஜராத் மாநிலத்தில் எக்ஸ்.இ வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஓமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தொற்று மேலும் பரவாமல் இருக்க நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!