இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி முடிவு!
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நிலவி வரும் மின்பற்றாக்குறை காரணமாக மாகாண தலைநகரான லாகூரில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
முழு ஊரடங்கு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசாங்கம், ஆற்றலைப் பாதுகாக்கும் விதமாக மின் தடைகளை குறைக்கும் நடவடிக்கையாக அனைத்து வகையான வணிகத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழுமையான பூட்டுதலை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சந்தை நேரங்களை இரவு 10 மணி வரை கட்டுப்படுத்துதல், வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்றியமைத்தல், வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வேலை முறையை அமல்படுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இப்போது லாகூரில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து வணிக நடவடிக்கைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணை ஆணையர் ஓமர் ஷேர் சாத்தா பிறப்பித்துள்ள உத்தரவில் ‘அனைத்து வணிகச் சந்தைகள், பிளாசாக்கள், மொத்த மற்றும் சில்லறை வணிகம், வணிக வளாகங்கள், பேக்கரிகள், மிட்டாய் கடைகள், அலுவலகங்கள், ஸ்டோர் ரூம்கள், குடோன்கள், கிடங்குகள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மூடப்பட்ட நாளாக கடைப்பிடிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
தமிழகத்தில் இனி மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – அரசு முக்கிய அறிவிப்பு!
இப்போது பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அந்நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்நாட்டில் தற்போது மோசமான மின் தடை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் ஒரு யூனிட் மின்சார கட்டணத்தை தாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், மேலும் ஒரு நாளைக்கு சுமார் 12 முதல் 16 மணிநேரம் வரை நீட்டிக்கப்பட்ட மின்வெட்டுகளால் பாதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் பொது மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.