தமிழகத்தில் இனி மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாளுக்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்களின் சராசரி விகிதம் தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தான் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதிகமான கொரோனா பரவல் இருந்து வரும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களை சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு கட்டாயமாக மாணவர்கள் மாஸ்க் அணிந்து தான் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான எச்சரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய உத்தரவு!
மேலும், தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீட்டு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் கட்டாயமாக பொது மக்கள் மாஸ்க் அணிந்து தான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முடிந்த வரைக்கும் பொது இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையையும் போட்டுக்கொள்ளாதவர்கள் கட்டாயமாக போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மக்கள் கட்டாயமாக அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.