நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – வன்முறை எதிரொலி!
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறி வரும் மக்கள் அரசுக்கு விரோதமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இலங்கையில் தற்போது மின் மற்றும் உணவுத்தடை, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை பரவலான சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள எதிர்ப்பாளர்களை, ஜனாதிபதி ராஜபக்சேவின் ஆட்கள் தடிகளுடன் கலைக்க முற்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், சுதந்திரத்திற்கு பின்னர் தற்போது ஏற்பட்டிருக்கும் மோசமான பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வன்முறை எதிரொலியாக இன்று (மே.9) முதல் இலங்கை காவல்துறையினர் ஊரடங்குச் சட்டத்தை விதித்துள்ளனர். இப்போது மத்திய கொழும்பில் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளை அடித்து நொறுக்கிய ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை வீசி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – RBI சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
இந்த சூழலில் இலங்கை முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதியின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ‘பொது மக்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். நாங்கள் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை. இந்த நிர்வாகம் இதை தீர்க்க உறுதிபூண்டுள்ளது’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவசரநிலையை திரும்பப் பெறுவதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று முதல் தினசரி போராட்டங்களை நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.