இன்று முதல் 38 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி?
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று (ஜூன் 12) முதல் 38 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய கடைகள் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் குறைந்து வரக்கூடிய நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ச்சியாக 38 மணிநேர முழு ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (ஜூன் 12) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
நாடு முழுவதும் ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!
இந்த காலகட்டத்தில், பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். தவிர இந்த கட்டுப்பாடுகளின் போது மருந்து கடைகள், கிளினிக்குகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பம்புகள், கேஸ் விற்பனை நிலையங்கள், வீட்டு விநியோகம் செய்யும் உணவகங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள தாபாக்கள், பாதுகாப்பு கிடங்குகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அனைத்து மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இதற்கிடையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜூன் 17 வரை நீடிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில்,
- ஜூன் 17 காலை வரை மாவட்ட நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் பேருந்துகள் தவிர, மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தடைசெய்யப்படும்.
- தனியார் வாகனங்களில் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு இ-பாஸ் கட்டாயம்.
- ஆனால் தனியார் வாகனங்களில் மாவட்டத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை.
- கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.