நாடு முழுவதும் ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!

0
நாடு முழுவதும் ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - இலங்கை அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - இலங்கை அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக அனைத்து பயண கட்டுப்பாடுகளும் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஜூன் 14 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்தாலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000க்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 101 ஆக பதிவாகியுள்ளது.

ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கோடை விடுமுறை நிறைவு!

இதனால் தற்போது அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள், ஆடை தொழிற்சாலைகள், கட்டுமான தளங்கள், கிராம சந்தைகள், விவசாய மற்றும் கரிம உர உற்பத்தி ஆகியவை கட்டுப்பாடுகளின் போது செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இலங்கை முழுவதும் இதுவரை 2,17,000 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் மிகவும் தொற்றுநோயான ஆல்பா மற்றும் டெல்டா வகைகள் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் 65 -75 வயதுக்கு உட்பட்டவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!