தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மே 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்த காரணத்தினால் மே 24 முதல் 31 வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர வேண்டாம் எனவும், மருந்து கடைகள் மற்றும் பால் விநியோகம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!!
இருந்த போதிலும் இப்போதுள்ள சூழ்நிலையில் தளர்வுகள் வழங்கினால் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் மேலும் சில வாரங்களுக்கு தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கை நீட்டிக்க அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.
வீட்டு வாட௧ை ம௧ளிா் ௧டன் தவனை இவை௧ளுக்கு ௭ன்ன செய்வது ௮ரசே
I stand with TN CM, but one day relaxation would have been best as people running short of groceries and other essential goods. For instance my ethernet cable pin was damaged and i cannot use my computer now as I work from home. I lost 10 days salary.