ஜூலை 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய டெல்டா பிளஸ் தாக்கம் எதிரொலி!
பஞ்சாப் மாநிலத்தில் புதிய வகை கொரோனா டெல்டா பிளஸ் நோய் தொற்றின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூலை 10 வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது சற்றே குறைந்து வருவதால் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் மே மாதம் 27 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்து, தற்போது ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு பணிகள் – 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
இந்த பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் வகை புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் டெல்டா பிளஸ் வைரஸின் புதிய தாக்கம் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூலை 10 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், ஜூலை 1 முதல் 50% திறன் கொண்ட பார்கள், பப்கள் இயங்குவதற்கு முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் டெல்டா பிளஸ் வேரியன்ட் கொரோனா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பஞ்சாபில் நேற்று (ஜூன் 29) ஒரு நாள் மட்டும் 271 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.