தமிழகத்தில் கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு பணிகள் – 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

0
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு பணிகள் - 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு பணிகள் - 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை முன்னேற்பாடு பணிகள் – 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு முன்னேற்பாடு நடவடிக்கைக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்தான அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா 3ம் அலை:

இந்தியாவில் கடந்த 2019 ஆம் முதல் கொரோனா என்ற நோய்த்தொற்று பரவி வருகின்றது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் கடுமையான ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மக்களை பெரும் பாதிப்படைய வைத்தது. இதனை தொடர்ந்து 2ம் அலை மிக தீவிரமாக பரவியது. தற்போது இந்த அலை ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் இந்தியாவில் 3ம் அலை வேகமாக பரவும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Google Pay-ல் UPI PIN மறந்து விட்டால் புதிதாக மாற்றம் செய்வது எப்படி?

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா நிவாரணத்திற்கு என்று நிதி வேண்டும் என்று அனைவரிடமும் கோரிக்கை ஒன்றினை வைத்திருந்தார். இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பது, ‘ஜூன் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதிலும் இருந்து 353 கோடி ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளது. பொது நிவாரணத்திற்காக பெறப்பட்ட இந்த பணம் கொரோனா 3ம் அலையின் முன்னேற்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். உயிர் காக்கும் மருந்துகளான ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை பெறுவதற்காகவும் அதனை அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

பின், திரவ ஆக்சிஜனை ரயில் மூலமாக கொண்டு வருவதற்காக கன்டைனர்கள் வாங்கப்படும். அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகளை வாங்குவதற்காகவும் 50 கோடி ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதே போல் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உருளைகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை சிப்காட் நிறுவனம் மூலமாக வாங்க 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதே போல் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் மருந்தினை வாங்க 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’ இவ்வாறாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!