இன்று முதல் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று (ஜூன் 20) முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இது தவிர மாநிலம் தழுவிய முழு ஊரடங்கானது ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவானது, ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு வீதம் குறைந்து வரும் காரணத்தால் ஹரியானா மாநிலத்தில் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
CBSE தனித்தேர்வு மாணவர்கள் தேர்வுகள் ரத்து? உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
இது குறித்து அம்மாநிலத்தின் தலைமை செயலாளர் விஜய் வர்தன் பிறப்பித்த உத்தரவின்படி, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பொது மக்கள் கலந்துகொள்வதற்கு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தவிர அம்மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகளின் படி,
- திருமணங்கள், இறுதி சடங்குகள் உள்ளிட்டவற்றில் 50 பேர் கலந்து கொள்ளலாம்.
- கார்ப்பரேட் அலுவலகங்கள் முழு ஊழியர்களுடன் திறக்கப்படலாம்.
- ஆனால் அவற்றில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
- நீதிமன்றங்களில் நடைபெறும் திருமணங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
- ஆனால் ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது.
TN Job “FB Group” Join Now
- தவிர கிளப், பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 50 சதவீத இருக்கை வசதிகளுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து இயங்கலாம்.
- ஹோட்டல் மற்றும் உணவகங்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
- மேலும் ஷாப்பிங் மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
- நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.