CBSE தனித்தேர்வு மாணவர்கள் தேர்வுகள் ரத்து? உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
நாடு முழுவதும் CBSE பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 1,152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு தேர்வு:
கொரோனா பரவல் காரணமாக CBSE பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தனித்தேர்வர்களும், கடந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற கம்பார்ட்மென்ட் பிரிவில் உள்ள மாணவர்களுக்கும் கட்டாயம் நேரில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – இன்று முதல் தொடக்கம்!
இந்த அறிவிப்பிற்கு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எந்த பள்ளியிலும் பதிவு செய்யாமல் தனியாக சிபிஎஸ்இ தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மற்றும் கம்பார்ட்மென்ட் மாணவர்கள் 1,152 பேர் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் கொரோனா பரவல் காரணமாக எங்களுக்கு எந்த நேரத்தில் தேர்வு நடைபெறும் என குறிப்பிட முடியாது.
TN Job “FB Group” Join Now
மேலும் நாங்கள் தேர்வு எழுதாமல் எந்த பல்கலைக்கழகத்திலும், கல்லூரியிலும் உயர் படிப்புகளுக்கு சேர முடியாது. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் எங்களின் படிக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். இதனால் எங்களது ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மற்ற மாணவர்களை போல எங்களது தேர்வும் ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர்களை போல எங்களுக்கும் மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நடைமுறையை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.