தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மக்கள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் - மக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் - மக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் தொடர்ந்து 10 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தமிழக மின்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தார். இதை அடுத்து பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் (ஜூன் 21) , நாளையும் (ஜூன் 22) பழனி வட்டாரத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 9 மாதங்களாக மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தினால் மின் சேவைகளில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து 10 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மின் நிலைய அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியதாவது, பழனியை அடுத்த வேப்பன் வலசு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

இன்று முதல் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

இதன் காரணமாக வேப்பன் வலசு, வாகரை, பூலாம்பட்டி, தொப்பம்பட்டி, ஆலா வலசு, மார்க் கண்டாபுரம், வேலம்பட்டி, பூசாரி கவுண்டன் வலசு ஆகிய கிராமங்களில் இன்று (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் அமரபூண்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக வத்த கவுண்டன் வலசு, பொன்னாபுரம், அமரபூண்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, போட்டம்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் இன்று (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் லம்போதரா துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக பாப்பம்பட்டி, குதிரையாறு டேம் ஆகிய கிராமங்களில் இன்று (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். அதேபோல் தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 22) நடைபெறவுள்ள பராமரிப்பு பணி காரணமாக பாப்பம்பட்டி, கள்ளப்பட்டி, வி.பி.புதூர், சித்தரேவு, லட்சலப்பட்டி, மல்லையகவுண்டன்பட்டி, மாரப்ப கவுண்டன் வலசு, தாழையூத்து, சின்னக்கலையாம் புத்தூர், மில்கேட், கிருஷ்ணாபுரம், தாத நாயக்கன்பட்டி, சித்திரை குளம் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் வி.கே.மில் மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நெய்க்காரப்பட்டி, கரிகாரன்புதூர், தாமரைக்குளம், சின்ன காந்திபுரம், ஆர்.ஜி.நகர் ஆகிய கிராமங்களிலும் ராமபட்டினபுதூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கோம்பைப்பட்டி, ராமபட்டினம்புதூர், சிந்தலவாடம்பட்டி, புதுக்கோட்டை ஆகிய கிராமங்களிலும், மொட்டனூத்து மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கோரிகடவு, கோவிலாம்பட்டி, எட்டப்ப நாயக்கனூர், நாச்சியப்ப கவுண்டன் வலசு ஆகிய கிராமங்களிலும் நாளை (ஜூன் 22) காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!