தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசுர வேகத்தில் உலக நாடுகளில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, மற்ற நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வந்தது. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இதனால் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு:

சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. கொரோனாவின் பிறப்பிடமான சீனா இன்னும் இந்த தொற்றின் வீரியத்தை அனுபவித்து வருகிறது. தற்போது சீனாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒமைக்ரான் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் நகரில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு தீவிரமடையத் தொடங்கியது. இந்த தொற்று பரவல் காரணமாக ஐந்து வாரங்களுக்கும் மேலாக சீனாவில் பொதுமுடக்கம் நீண்டுள்ளது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை 20,000க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில், அந்த நாடு சுனாமி போன்ற ஒமைக்ரான் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக சீன அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாளை (மே 3) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு – பண்டிகை எதிரொலி!

குறிப்பாக, சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 3வது வாரமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அபாயம் நிறைந்த பகுதிகள் அதிகரித்து வருவதால், அங்கு 2.1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நியூக்ளிக் அமில பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் (ஏப். 30) பொது இடங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. ஷாங்காய் நகரில் பரவியதைப்போல பெய்ஜிங்கிலும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

ஷாங்காய் நகரில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகக் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஷாங்காய் நகரில் வசிக்கும் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்குக்கு எதிராக பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஜீரோ கொரோனா கொள்கையை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் பட்சத்தில், பகுதி பகுதியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!