நாளை (மே 3) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு – பண்டிகை எதிரொலி!
கேரளாவில், ஈத்-உல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு நாளை (மே.3) ஒரு நாள் மட்டும் கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
விடுமுறை அறிவிப்பு
இஸ்லாமியர்கள் கொண்டாடும் புனித நாளான ஈத்-உல்-பித்ர் பண்டிகை இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் ஈத்-உல்-பித்ர் பண்டிகை ஷவ்வால் பிறை தெரியும் நாட்களை பொறுத்து ஒவ்வொரு நாடுகளுக்கும் வேறுபடும். இந்த பண்டிகையானது இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஈத்-உல்-பித்ர் பண்டிகை, இம்முறை மே 3ம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முன் கூட்டியே கோடை விடுமுறை!
இப்போது ஈத்-உல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு மே 3ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஈத்-உல்பித்ர் பண்டிகைக்கான பிறை மே 2ம் தேதி வரும் என்று எதிர்பார்த்து இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சந்திர இஸ்லாமிய நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டியில் ஷவ்வால் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு கேரளாவில் காணப்படவில்லை.
Exams Daily Mobile App Download
இதனால் இஸ்லாமிய மக்கள் ஒரு நாள் கழித்து ஈத் பண்டிகையை கொண்டாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈத்-உல்-பித்ர், இஸ்லாமிய நாட்காட்டியின் 10 மாதமான ஷவ்வாலின் முதல் நாளில் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் பக்தர்களால் ஒரு மாதம் வரைக்கும் விடியற்காலை முதல் அந்தி வரை கடைபிடிக்கப்படும் நோன்பு முடிவை இது குறிக்கிறது. இந்த ஈத்-உல்-பித்ர் பண்டிகை கேரளாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடையே செரியா பெருநாள் என்று அழைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.