தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் முழு ஊரடங்கு? அரசின் அதிரடி முடிவு!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து தேர்தலுக்கு பின்னர், முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
முழு ஊரடங்கு
உலக நாடுகள் அனைத்தையும் கடந்த 2020 ம் ஆண்டு முதல் கொரோனா என்ற வைரஸ் தாக்கி அச்சத்தினை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் பரவல் தற்போது வரை நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு பின்னர், மீண்டும் கொரோனா இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவின் 3வது அலையின் எதிரொலியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கணித்து வருகின்றனர்.
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !
இதனை தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த மாதம் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆப்தே போலவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்று அனைத்தும் முழுமையாக மூடப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததால், தமிழகத்தில் இந்த மாதம் 19ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.
நாளை (பிப்.6) மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!
அதன் எதிரொலியாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. அதே போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. இதனால் தேர்தல் முடிந்த பின்னர், தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். காரணம், கடந்த ஆண்டும் இதே போலவே தேர்தல் முடிந்த பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த முறையும் கடந்த வருடம் போலவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.