மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் எண்ணம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்திலும் தற்போது நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இருந்த போதிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மாநில சுகாதார அமைச்சர் கேசப் மஹந்தா தெரிவித்துள்ளார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
இது குறித்து அவர் கூறும் போது, ‘அசாம் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா வழக்குகளின் அதிகரிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ஆனால் அவ்வப்போது அரசாங்கம் வழங்கும் வழிகாட்டுதல்களின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கிடையில் தேவைப்பட்டால் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கும். ஆனால் முழு ஊரடங்கை விதிக்கும் எண்ணம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
இப்போது நிபுணர்களின் கணிப்புகளின்படி, கொரோனா வழக்குகள் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்களின் கூற்றுப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் (19.72%) 21-30 மற்றும் 51-60 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிகிறது. மேலும் நோய் தொற்றால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.