ஆதார் முதல் வங்கி லாக்கர் வரை ஜன.1 முதல் அமலாகும் மாற்றங்கள் – என்னென்ன விதிகள்!
2024 புதிய ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு புதிய மாற்றங்களுக்கான விதிமுறைகளும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்கள்:
2024 ஆம் புத்தாண்டு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. புத்தாண்டை ஒட்டி பல்வேறு துறைகளை சார்ந்த செயல்பாடுகளுக்கும் புதிய விதிமுறைகள் அமலாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவற்றில் பல செயல்பாடுகள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையது, என்பதால் மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்துக் கொள்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். வர்த்தக கணக்குகளுக்கான டிமேட் அக்கவுண்டில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் நாமினியை இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிமேட் கணக்கில் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்படும்.
பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!!
முன்னதாக டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்களின் கோரிக்கையை தொடர்ந்து இதற்கான கால அவகாசம் தற்போது மார்ச் 14, 2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு ஆதாரில் உள்ள மாற்றங்களை செய்வதற்கு ரூபாய் 50 கட்டணமாக செலுத்த வேண்டும். டிசம்பர் 31 ஆம் தேதியுடன் வங்கியில் லாக்கர் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் தங்கள் கல்விக்காக செலவழிக்கும் கட்டணம் இரட்டிப்பாகும் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.