ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச வைஃபை வசதி! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்தியாவில் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளுக்கு இலவச வைஃபை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 30 நிமிடங்களுக்கு மேல் இணைய சேவையை பயன்படுத்துவோருக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது.
இலவச வைஃபை:
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ரயில்வே துறையாகும். பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே துறையின் பங்கு இன்றியமையாததாகும். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் பெரும்பாலான முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வே துறை பெரும் சரிவை சந்தித்தது. தற்போது பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி முன்பதிவு அடிப்படையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டு முறை பாகிஸ்தானுக்கு பறக்க உள்ள நியூஸிலாந்து அணி – கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!
விரைவில் வழக்கம் போல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க திட்டமிட்டு வருவதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரயில்வே துறை ரயில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் ரயில்களில் தொகுப்பாளிகள் நியமிக்கப்படுவர். அவர்கள் பயணிகளுக்கு தேவையான உணவுகள் போன்றவற்றை வழங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவச வைஃபை வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது மொபைலில் வைஃபையை ஆன் செய்து RailWire என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் போலீசாரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு – டிச.22ம் தேதி முகாம்!
அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு உங்களுக்கு அதில் வரும் OTPயை பதிவிட்டு இலவச வைஃபை இணைப்பை பெறலாம். ரயில்வே துறையின் இந்த திட்டம் மூலம் அதிவேக இணைய சேவையை பெற்று வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் நாள் ஒன்றுக்கு ஒரு எம்.பி.பி.எஸ் வேகத்தில் முதல் 30 நிமிடங்களுக்கு மட்டும் இலவசமாக சேவையை வைஃபை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் இணைய சேவையை உபயோகப்படுத்தவும், அதற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் முதல் 30 நாட்களுக்கு 75 ரூபாய் வரை கட்டணம் செலுத்தலாம்.