தமிழகத்தில் போலீசாரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு – டிச.22ம் தேதி முகாம்!

0
தமிழகத்தில் போலீசாரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு - டிச.22ம் தேதி முகாம்!
தமிழகத்தில் போலீசாரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு - டிச.22ம் தேதி முகாம்!
தமிழகத்தில் போலீசாரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு – டிச.22ம் தேதி முகாம்!

தமிழகத்தில் போலீசாரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 8 மாவட்டங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக சைலேந்திர பாபு அவர்கள் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுள்ளார். அவ்வாறு அவர் பொறுப்பேற்றதில் இருந்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் ஏற்ற பல்வேறு புதிய செயல்களை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களை பொறுத்தவரை மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் இதுவரை விடுமுறை என்பது பெரும்பாலும் வழங்கப்படாத ஒன்று ஆகும்.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

ஆனால் சைலேந்திர பாபு அவர்கள் டி.ஜி.பி யாக பொறுப்பேற்ற சில வாரங்களில் அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது காவல் துறையில் பணியாற்றும் போலீசாரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் டிச.24ம் தேதி வரையிலான வானிலை நிலவரம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

தற்போது கோவை மாவட்ட மேற்கு மண்டல காவலர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வரும் டிச.22ம் தேதி கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை கோவை மாவட்ட போலீசார் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள காவலர் குடும்பத்தினர் வரும் டிச.22ம் தேதி காலை 9:00 மணிக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை ஆன்லைன் வாயிலாக 1,500 பேர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!