சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்தி நகை வாங்க முற்படுகின்றனர்.
தங்க விலை:
இந்தியாவில் பரவிய கொரோனா தொற்று காரணமாக தொழில் துறையில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் சாமானிய மக்கள் நகை வாங்குவதில் பெரும் சவாலை சந்தித்தனர். பிறகு படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கியது. இந்த நிலையில் நகை விலை ஓரளவு குறைந்தது. வழக்கமாக பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த தினங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
தமிழகத்தில் டிச.24ம் தேதி வரையிலான வானிலை நிலவரம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!
அந்த வகையில் கடந்த மாதம் தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை அதிகரித்து. இதனால் நகைப்பிரியர்கள் நகை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். அவ்வப்போது தங்கம் விலை குறைந்தாலும் எதிர்பார்த்த அளவு இன்னும் குறையவில்லை. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36,768 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.4,596க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகை? இன்று முக்கிய ஆலோசனை!
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.36,728க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை 8 ரூபாய் குறைந்து ரூ.4,957க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 65,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வரப்போகும் நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.