சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – இலவச Wi-Fi வசதி அறிமுகம்!

0
சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - இலவச Wi-Fi வசதி அறிமுகம்!
சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - இலவச Wi-Fi வசதி அறிமுகம்!
சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – இலவச Wi-Fi வசதி அறிமுகம்!

சென்னையில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு Wi-Fi வசதியை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Wi-Fi வசதி:

தமிழகத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இலவச Wi-Fi தொடர்பை வழங்கும் கம்பங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு விதமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒரே நாளில் 25,166 பேருக்கு கொரோனா தொற்று – 437 பேர் உயிரிழப்பு!

இந்த திட்டம் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப் பணிகளை ஒருங்கிணைத்து நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதே ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த திட்டம் மூலமாக மாநகரின் முக்கிய இடங்களை கண்காணித்தல் பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழியும் அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், அவசர காலத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல், திடக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதன் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் ரிப்பன் கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டத்திற்காக சென்னை மாநகரில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள Wi-Fi தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச Wi-Fi பெறுவதற்கு கைபேசி எண்ணை பதிவு செய்து OTP மூலம் இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்ட 49 பகுதிகள் குறித்த விவரங்களை https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf இணையதள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!