9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – மாநில அரசு ஒப்புதல்!
ஆந்திர பிரதேசத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இலவச மடிக்கணினி
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு பொது மக்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று (ஜூன் 30) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையே தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ‘ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை பயன்படுத்தி தெலுங்கானா அரசு மின்சாரம் தயாரிக்கிறது.
சென்னை மாநகராட்சியில் 746 தற்காலிக பணியிடங்கள் – 3 ஆண்டுகள் நீட்டிப்பு!
தண்ணீர் வழங்குவதிலும் தெலுங்கானா அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு கிருஷ்ணா நதிநீர் வாரியத்துக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுத வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து அக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னாக அமைச்சர் நானி கூறுகையில், ‘ஆந்திர மாநில அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விஜயநகரத்தில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்தும் டிட்கோ சார்பில் ஏழைகளுக்காக 2.62 லட்சம் வீடுகள் கட்டி பங்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.