சென்னை மாநகராட்சியில் 746 தற்காலிக பணியிடங்கள் – 3 ஆண்டுகள் நீட்டிப்பு!
சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 746 பதவிகளுக்கான பணிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் மிக அதிக பாதிப்பு எண்ணிக்கை சென்னை மாநகரத்தில் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னை மாநகராட்சி, மேற்கொண்ட பல கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகரத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு வலியுறுத்தல்!!
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள தற்காலிக பதவிகளின் பணிக்காலம் குறித்த முக்கிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் 1,896 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் மாநகராட்சியின் செலவீனத்தை கருத்தில் கொண்டு 1,150 பதவிகள் அவசியம் இல்லாததாக கருதி கடந்த 2012 ஆம் ஆண்டில் தற்காலிக பதவிக்கலாம் 746 ஆக குறைக்கப்பட்டது. இப்பதிவிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு காலம் கடந்த 2021 மார்ச் 31 உடன் முடிவுக்கு வந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகையும் தற்போது பெருகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்காலிக பதவிகளுக்கான பணிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு மாநகராட்சி சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டது. அதை ஏற்று கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட 4 துணை ஆணையர் பதவிகள் மற்றும் அதை சார்ந்த 4 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.