தமிழகத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு வலியுறுத்தல்!!
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்ததால் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த கல்வி ஆண்டு துவங்கி ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில், பள்ளிகளை திறக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரி வருகின்றனர்.
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் தொடக்கம்!
அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகத்தில் கூடிய விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மாதம் முதல் துவங்கியது. அதே போல் நிர்வாக பணிகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 75 சதவீத பள்ளி கட்டணத்தை மட்டுமே தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்து சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், ’10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமாவது பள்ளிகளை திறக்க வேண்டும். அதே பின் படிப்படியாக நர்சரி, பிரைமரி வகுப்புகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.