IPL 2023 க்கு பிறகு முடிவுக்கு வரும் இலவச ஜியோ சினிமா திட்டம் – புதிய அறிவிப்பு வெளியீடு!
தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளை இலவசமாகவே வழங்கி வரும் ஜியோ சினிமா ஐபிஎல் 2023க்கு பிறகு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தும் படியான சந்தா திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோ சினிமா
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு என அனைத்து நிகழ்வுகளையும் இலவசமாகவே வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கும் வண்ணம் அற்புதமான திட்டத்தை JIO Cinema வழங்கி வருகிறது. ஆனால், தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2023 போட்டிகள் நிறைவடைந்த பிறகு ஜியோ சினிமா இலவசமாக வழங்கி வரும் திட்டத்தை ரத்து செய்து சந்தா திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப அன்றாட திட்டம், கோல்ட், பிளாட்டினம் என மூன்று வகையாக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
Whats app பயனர்களுக்கு புதிய அப்டேட் – இனி யாரெல்லாம் குரூப்ல இருக்காலானு நீங்களே முடிவு பண்ணலாம்!
அதாவது, ஒரு நாள் திட்டமாக ஆரம்பத்தில் ரூபாய் 2க்கு வழங்கப்படும் எனவும், நாளடைவில் ஒரு நாள் திட்டம் ரூபாய் 29 என்று மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஒரு மாதத்திற்கான கோல்ட் சந்தா திட்டத்தில் ஆரம்பத்தில் ரூ. 99க்கு கிடைக்கும் எனவும், நாளடைவில் 299 ரூபாய்க்கு எனவும், ஒரு வருடம் பயன்படுத்திக் கொள்ளும் படியான சந்தா திட்டம் ஆரம்பத்தில் 599 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், நாளடைவில் அதன் கட்டணம் ரூ.1199 ஆக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், JIO சினிமா இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை வெளியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.