Whats app பயனர்களுக்கு புதிய அப்டேட் – இனி யாரெல்லாம் குரூப்ல இருக்காலானு நீங்களே முடிவு பண்ணலாம்!
வாட்ஸ் அப் குரூப் தொடர்பான புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் குரூப் உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையிலான அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
வாட்ஸ்அப்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி கடந்த ஒரு வருடங்களாக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 1,024 ஆக உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் 256 பேர் மட்டுமே ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருக்க முடியும்.
இந்தியாவில் குறைய தொடங்கும் கொரோனா பாதிப்பு – ஒரு நாளில் 6,660 பேருக்கு உறுதி!
அதன் பிறகு இந்த எண்ணிக்கை 512 ஆக இருந்தது. தற்போது 1,024 ஆக உயர்ந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பை வழங்கும் வகையில் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் அனுப்பப்படும் மெசேஜ் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் மற்றும் ரெக்கார்டிங் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
அண்மையில் ஆடியோக்களையும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கூடுதல் அம்சமாக வாட்ஸ்அப் குரூப்பில் யார் இணைய வேண்டும் என்பதை குரூப் அட்மின் முடிவு செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான ஆப்ஷன் செட்டிங்கில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குரூப் அட்மின் விரும்பிய நபரை மட்டுமே குரூப்பில் அனுமதிக்க முடியும்.