ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இலவச உணவு தானியங்கள்! 4 மாதங்களுக்கு நீட்டிப்பு!
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக வழங்கி வந்த இலவச உணவு தானியங்களை மேலும் 4 நான்கு மாதங்கள் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஒப்புதல்:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையினால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வந்தனர். இதனால் மத்திய அரசு மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணம் அளிக்க முடிவு செய்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக 5 கிலோ உணவு தானியம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
முன்னதாக இந்த திட்டம் மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டுமே செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அவர்களின் மாதாந்திர தானியங்களுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. வட இந்திய மாநிலங்களில் இதற்கு பதிலாக ஐந்து கிலோ கோதுமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 80 கோடிக்கும் அதிகமானவர்கள் பலனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் – அரசுக்கு கோரிக்கை!
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நவம்பர் மாதத்திற்கு பிறகு நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே அறிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த திட்டத்தினை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள்.