தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படும் என்று வத்தலக்குண்டு மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
ஒவ்வொரு நாளும் மின் கோளாறு மற்றும் மின் கசிவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலை கூட ஏற்படுகிறது. மேலும் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ள பெருக்காக இருக்கிறது. இதனால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்லும் போது இத்தகைய விபத்துக்கள் ஏராளமான இடங்களில் ஏற்படுகிறது.
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 26% ஆக அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
இந்த விபத்துகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கையாக மின் பராமரிப்பு முறைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அதனால் தமிழக அரசு மாதந்தோறும் மின்தடையை அறிவித்து மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்கின்றது. இதனால் மின் கசிவு மற்றும் மின் கோளாறுகள் ஏற்படுவது குறைகிறது. அதனால் ஏற்படும் விபத்துகளும் குறைகின்றது. அதனால் தமிழ்நாட்டில் மாதாந்திர மின்தடை தொடர்ச்சியாக பின்பற்றப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் – அரசுக்கு கோரிக்கை!
அத்துடன் நாளை திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ராமராஜபுரம், மட்டப்பாறை, பெருமாள்பட்டி, கருப்பட்டி , இரும்பாடி , நாச்சிகுளம், பொம்மன்பட்டி, குல்லலகுண்டு, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.