தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை (நவ.25) விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை (நவ.25) விடுமுறை அறிவிப்பு - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை (நவ.25) விடுமுறை அறிவிப்பு - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை (நவ.25) விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளை (25.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த அச்சம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கைகள் எழுந்தது. அதனால் பள்ளிகள் திறப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு முதல்கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இலவச உணவு தானியங்கள்! 4 மாதங்களுக்கு நீட்டிப்பு!

அதன் பிறகு அடுத்தகட்டமாக 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனால் தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர். தற்போது மீண்டும் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய தினங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (25.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!