ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு இலவச கேஸ் சிலிண்டர்? புதிய அறிவிப்பு வெளியீடு!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் இனி ஆண்டுதோறும் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இலவச சிலிண்டர்:
நாடு முழுவதும் உள்ள தகுதியான ஏழை மக்களுக்கு மத்திய அரசாங்கம் இலவசமாக LPG கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் இந்த இலவச கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இப்போது ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆண்டுதோறும் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. அரசின் இந்த முடிவானது, பொது மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இப்போது மத்திய அரசின் அந்தியோதயா அட்டை பயனாளி ஒவ்வொருவருக்கும் இந்த இலவச சிலிண்டர்கள் கிடைக்க இருக்கிறது. இது தொடர்பாக உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் உள்ள தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இப்போது அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே இந்த இலவச கேஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநில அரசு அறிவித்துள்ள இந்த சலுகையை பெற்றுக்கொள்ள ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டறிவது எப்படி? முழு விவரங்கள் இதோ!
அந்த வகையில் ஜூலை மாதத்திற்குள் ரேஷன் பயனாளிகள், அந்தியோதயா அட்டையை இந்த திட்டத்தில் இணைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்த பிற்பாடு ரேஷன் அட்டைகள் அந்தியோதயா நுகர்வோர் பட்டியலில் இடம் பிடிக்கும். இந்த பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு பயனர்களுக்கு இலவசமாக சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மாநில அரசின் இந்த நடவடிக்கையால் 55 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.