தமிழகத்தில் பொது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் 2 டோஸ் தடுப்பூசியை தொடர்ந்து தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 618 பேரும், கோயம்புத்தூர் 153 பேரும், கடலூர் 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்வதால் விரைந்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கி விட்டது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குடும்ப நல பயிற்சி மையத்தில் 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டோருக்கு இலவச ‘பூஸ்டர்’ கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 95.27 சதவீதம் பேர் முதல் தவணையும், 87.35 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் 18.28 லட்சம் பேருக்கு ‘பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வரும் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் போட, நாடு முழுவதும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 4.61 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் தமிழகத்தில் 4.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டி உள்ளது. அதனால் மக்கள் தாமதிக்காமல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த முன் வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.