தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க கல்வி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வரவேற்பு:
தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனிற்காக ஏகப்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 28 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் இயங்கி வருகிறது. அதில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் பயின்று வரும் மாணவ மாணவிகள் தங்களது பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்க விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
விடுதியில் தங்க விருப்பமுள்ள மாணவர்கள் விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்பட வேண்டும். இந்த விடுதிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி – அதிர்ச்சியில் மக்கள்! மருத்துவர்கள் எச்சரிக்கை!
விண்ணப்ப படிவத்தில் மாணவ, மாணவிகளின் புகைப்படங்களுடன் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெற வேண்டும். அது மட்டுமில்லாமல் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் கட்டாயம் வங்கி கணக்கு தொடங்கி இருக்க வேண்டும். மேலும் விண்ணப்படிவதில் ஆதார் எண்ணை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விடுதிகளில் சேர பள்ளி மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வருகிற ஜூலை 20 ஆம் தேதியும், கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரி விடுதிகள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.