ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச 3 கேஸ் சிலிண்டர்கள் – அரசு திடீர் அறிவிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பொது மக்களுக்கு வருடத்திற்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த கேஸ் சிலிண்டர்களை பெறுவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
கேஸ் சிலிண்டர்:
அனைத்து நாடுகளிலுமே சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதாவது நாட்டில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அந்த தாக்கத்தைக் குறைப்பதற்காக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அவ்வப்போது அரசு உயர்த்தி வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வருடத்தில் மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க இருப்பதாக திடீர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் அந்தியோதயா திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை விடுமுறை – அரசின் திடீர் அறிவிப்பு!
ஆனால் இந்த இலவச கேஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் பெறுவதற்கு சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது. அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்படும் பொதுமக்களுக்கு மட்டுமே இந்த மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இலவச கேஸ் சிலிண்டரை வாங்குவதற்கு முதல் தகுதியாக சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும் மற்றும் ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் அட்டையை கேஸ் அட்டையுடன் இணைக்க வேண்டும்.
மேலும், அந்தியோதயா அட்டையுடன் கியாஸ் இணைப்பு அட்டையை இணைக்கவில்லை எனில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தியோதயா அட்டையுடன் கியாஸ் இணைப்பு அட்டையை இணைக்காதவர்கள் விரைவில் இந்த ஜூலை மாதத்திற்குள் இணைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தின் மூலமாக கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.