மத்திய அரசு “இதற்கு” எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாட்டில் கட்டாய மதமாற்றம், சூனியம், மூடநம்பிக்கை ஆகியவற்றிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்தது பற்றி விரிவாக பார்ப்போம்.
கட்டாய மதமாற்றம்:
நாட்டில் கட்டாய மதமாற்றம், சூனியம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடுபவர்களுக்கு சில மாநிலங்களில் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதற்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளன. அதன்படி கட்டாய மதமாற்றம் செய்ய வைப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. ஆனாலும் சில மாநிலங்களில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனை தடுக்கும் விதமாக மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்த நிலையில், நாட்டில் கட்டாய மதமாற்றம் நாட்டு மக்களின் மதச் சுதந்திரத்தை பாதிக்கிறது அத்துடன் நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்கிறது. அதனால் மத்திய அரசு கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு.. நடவடிக்கைகள் தீவிரம் – அரசு உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 22ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு எதிர் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.