தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு.. நடவடிக்கைகள் தீவிரம் – அரசு உத்தரவு!
பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தில் அதிக அக்கறை கொண்டுள்ள அரசு பல வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி அறிவை வளர்க்கும் பொருட்டு முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி:
தமிழக பள்ளிக்கல்வித்துறை கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல திட்டங்களை பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டு முதல் தொடக்க கல்வி மாணவர்களுக்கு எண்ணையும், எழுத்தையும் தெளிவாக கற்பிக்கும் வகையில் எண்ணும், எழுத்தும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் வரும் 2025 ம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அடிப்படை எழுத்து கணித அறிவை மேம்படுத்துவது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து வாசிப்பு பயிற்சி அளிக்கும் நோக்கில் ரீடிங் மாரத்தான் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளின் வாசிப்பு திறன் மேம்படும் என்று கல்வித்துறை தெரிவித்தது. தற்போது மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பயனர்களை பாடாய்படுத்தும் ட்விட்டர்.. நீங்களும் வெளியேறனுமா – வழிமுறைகள் உள்ளே!
Exams Daily Mobile App Download
அதன் படி தொடக்க வகுப்புகளான 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வரும் 26-ஆம் தேதி குறு வள மையத்தில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக சுமார் 442 முதன்மை கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்பயிற்சியினை சிறப்பாக நடத்த தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.