தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளுக்கு நாளை (ஆக.20) மின்தடை – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளுக்கு நாளை (ஆக.20) மின்தடை - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளுக்கு நாளை (ஆக.20) மின்தடை - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளுக்கு நாளை (ஆக.20) மின்தடை – முக்கிய அறிவிப்பு!

நெல்லையில் உள்ள பாளை மற்றும் மேலப்பாளையம் பகுதி துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 20) மாதாந்திர பணி நடைபெற உள்ள காரணத்தால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

மின்தடை :

தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் முன்னரே சென்று விடும்.

அவ்விதமாக நெல்லையில் பாளை மற்றும் மேலப்பாளையம் துணைமின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர்,

அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி,

PM Kisan பயனாளிகள் கவனத்திற்கு – கடைசி தேதி நீட்டிப்பு!

சாந்திநகர், திம்மராஜபுரம். சமாதானபுரம், கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலக்கல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளன்குளத்தில் மின்வினியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!