தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
சிறந்த பென்ஷன் திட்டமாக விளங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பயன்படுத்தி எளிமையாக ஆன்லைன் மூலமாக இணைந்து கொள்ளலாம்.
ஓய்வூதியத் திட்டம்:
இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவில் பிரபலமான பென்ஷன் திட்டமாக விளங்கி வருகிறது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவைகளை வழங்குவதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்தகைய தேசிய ஓய்வூதிய சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதையும், ஓய்வூதிய சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதை மட்டுமே இலக்காக கொண்டு விளங்கி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் மூலமாக வயதான காலத்தில் நிதி நிலைத்தன்மையை பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். இத்தகைய தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர விரும்புவர்கள் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று தான் இத்திட்டத்தின் கீழ் இணைய வேண்டும் என்பது அவசியமில்லை. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவோரின் வசதிக்காக கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் தான் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறையை இந்திய அஞ்சல்துறை அறிவிப்பு செய்துள்ளது. எளிமையாக ஆன்லைன் மூலமாகவே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அதாவது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்புவோர் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளம் பகுதிக்கு சென்று அதில் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் ஆன்லைன் சர்வீஸ் என்ற பகுதியை கிளிக் செய்து அதில் இணைய வேண்டும். இந்த தளத்தில் புதிய புதிதாக பதிவு செய்தல் பங்களிப்பு ஆகியவற்றை என்பிஎஸ் திட்டத்தில் உள்ளனர். 18 வயது பூர்த்தியான இந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இணைந்து பயன் பெற முடியும்.