தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. தற்போது இன்றைய வானிலை நிலவரத்தை குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் இவ்வாறு மழை பெய்வது கடந்த 4 அல்லது 5 ஆண்டு காலத்திற்கு பிறகு நிகழ்கிறது என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய வானிலை நிலவரத்தை பற்றி சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் தெரிவித்தாவது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தின் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!
அத்துடன் அடுத்த மாதம் 1,2,3ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன்வர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் வானிலை மையம் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.