அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு துவங்க நினைப்பவர்கள் கவனத்திற்கு – தபால் துறை முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோர் இனிமேல் தபால் அலுவலகத்துக்கு நேரில் செல்ல தேவையில்லை என்று தெரிவித்து உள்ளனர். மேலும், இனிமேல் இணையத்தின் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளனர்.
அஞ்சல் துறை
இந்தியாவில் உள்ள போஸ்ட் ஆபீஸ் மட்டுமல்ல எந்த ஒரு சேமிப்பு திட்டத்திலும், முதலீடு திட்டத்திலும் பணத்தை போடுவது வட்டிக்காக தான். அந்த வட்டி முறையாக கிடைத்தால் தான் போட்ட பணத்துக்கு லாபம். இல்லையென்றால் முதலீடு நஷ்டத்தில் தான் முடியும். அதனால் தான் பெரும்பாலான மக்கள், ரிஸ்க் இல்லாத முதலீடு என கருதப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகம் விரும்புகின்றனர். இந்த வங்கியில் மட்டும் தான் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பது இல்லை. இந்நிலையில் தற்போது போஸ்ட் ஆபீஸில் புதிய விதிமுறைகள் செயல்பட இருப்பதாக இந்திய அஞ்சல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்த ஒரு தொகுப்பை இங்கு காண்போம்.
மாநிலத்தில் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் அதிரடி உத்தரவு!
இந்த நிலையில், இந்த திட்டத்தில் இணைய வழியில் சேரும் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக தபால் துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அது என்னவென்றால், இணைய வழியில் என் பி எஸ் திட்டத்தில் சேரும் வசதியை கடந்த 26-ஆம் தேதி முதல் தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாக தபால் நிலையங்களுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த இணையவழி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, 18 முதல் 70 வயது வரை உடைய இந்திய குடிமக்கள், இந்திய தபால்துறை வலைதளம் மூலமாக இந்த வசதியைப் பெற முடியும். என் பி எஸ்க்கான புதிய பதிவு, தொடக்க மற்றும் மாதப் பங்களிப்பு, ஒவ்வொரு மாதமும் பணம் பிடித்தம் செய்ய வேண்டிய தேதி ஆகிய அனைத்து நடைமுறைகளையும் மிக குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளா்கள் இணைய வழியிலேயே மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்து உள்ளனர்.