மதுரை மக்கள் கவனத்திற்கு – கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் உற்சவம்! ஆட்சியர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள மதுரையின் மிக முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் உற்சவம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வுக்காக மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்து உள்ளார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. மேலும் அதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் எந்த வித திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தளர்வுகளில் முக்கிய ஒன்று அனைத்து கோவில்களும் மீண்டும் பழைய நிலைக்கு திறக்கப் பட்டு அனைத்து திருவிழாக்களும் நடைபெறும் என்றும் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
TNPSC Coaching Center Join Now
இதனை தொடர்ந்து, மதுரையின் பிரசித்தி பெற்ற கோவிலான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சென்ற 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா அமோகமாக தொடங்கியது. மேலும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரு ஆண்டுக்கு பின்னர் பக்தகோடிகள் மத்தியில் நடைபெற்றது. மேலும் இன்று தேரோட்டம் நடைபெற்றது. அடுத்ததாக, மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் உற்சவம் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது மதுரை ஆட்சியர் இந்த திருவிழா குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் ஆற்றில் இறங்கி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் பக்தர்கள் கரையோரங்களில் நின்று தரிசனம் செய்ய ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை காலை 5.30 மணி முதல் 6.20 மணிக்குள் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.