தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய அப்டேட் இதோ!
தமிழகத்தில் உள்ள பொது மக்கள் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் தொலைந்து விட்டால் அதை திரும்ப பெற ஆன்லைனில் தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது. அதனால் புதிதாக ரேஷன் கார்டு வாங்க திட்டமிடுபவர்கள் இந்த தொகுப்பை முழுமையாக பார்க்கவும்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாக மாறி விட்டது. மேலும் தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவி இருந்த காரணத்தால் ரேஷன் கடைகள் மூலமாகவே சாமானிய பொது மக்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வந்தனர். மேலும் அந்த சமயத்தில் கொரோனா நிவாரண நிதியாக இரு தவணையாக ரூபாய் 2000 வழங்கப் பட்டது. அதன் பின்னர் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 விரைவில் வழங்க இருப்பதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது இந்த முக்கிய ஆவணமான ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா உடனே ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழே விவரமாக பார்ப்போம். தொலைத்தவர்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் இந்த வேலையை வெறும் 20 நிமிடத்தில் முடித்து விடலாம். அதற்கான படிகளாக, 1. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான அதன் பின்னர் https://www.tnpds.gov.in/ சென்று லாகின் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, இப்போது பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.
TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். மேலும் இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் அதில் உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அடுத்தாக, தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.