தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அடுத்த மாதம் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து இருப்பதாக தமிழக அரசின் சார்பில் அரசாணை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தநார். மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொது தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
8வது முடித்தவர்க்கு தமிழக அரசு வேலை தயார் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் தற்போது 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை இயக்கக உயரதிகாரிகள் தேர்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களிலும் பொதுத்தேர்வை கண்காணிக்க தனித்தனி அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.