வரலாறு காணாத கனமழை – 2வது நாளாக விமான சேவை ரத்து!

0

வரலாறு காணாத கனமழை – 2வது நாளாக விமான சேவை ரத்து!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. இதனால் துபாய் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. துபாயின் விமான நிலையங்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விமான சேவை 2 வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான சேவை ரத்து:

நேற்று இரவு துபாயிலிருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு செல்ல வேண்டிய எமிரேட்ஸ்விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளான சார்ஜா, துபாய் போன்ற நாடுகளில் தற்போது கனமழை பெய்து வருவதால் அங்கு மிகவும் மோசமான வானிலை நிலை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் செல்லும் விமானங்களும் அந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களும் இன்று இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Follow our Instagram for more Latest Updates

அதாவது சார்ஜா, குவைத், துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்களும் என மொத்தம் பத்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் இருந்து துபாய், அபுதாபி செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்க உள்ளாகி வருகின்றனர். இந்த நிலைமை எப்பொழுது சரியாகும் என்பது பற்றிய அறிவிப்பை அந்த அரசு இன்னும் வெளியிடவில்லை. எனவே மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!