இனி காலை 5 மணி வரை மட்டுமே மீன்கள் விற்பனைக்கு அனுமதி – புதிய நேர கட்டுப்பாடுகள்!

0
இனி காலை 5 மணி வரை மட்டுமே மீன்கள் விற்பனைக்கு அனுமதி - புதிய நேர கட்டுப்பாடுகள்!
இனி காலை 5 மணி வரை மட்டுமே மீன்கள் விற்பனைக்கு அனுமதி - புதிய நேர கட்டுப்பாடுகள்!
இனி காலை 5 மணி வரை மட்டுமே மீன்கள் விற்பனைக்கு அனுமதி – புதிய நேர கட்டுப்பாடுகள்!

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பதால் காசிமேடு மார்க்கெட் பகுதியில் மீன் விற்பனை செய்ய புதிய நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை மட்டுமே விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நேர கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளன. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் அம்மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தலைநகர் சென்னையில் புதிய நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்டம்பர் 30 க்குள் பான் & ஆதார் இணைப்பு!

சென்னை காசிமேடு பகுதியில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதால் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல்துறையினர், மீனவ சங்க நிர்வாகிகள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை மீன்களை வாங்கி செல்ல மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த வியாபாரிகள் காசிமேடு பகுதியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மீன்வளத்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி மொத்த வியாபாரிகள் மீன்களை வாங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து வார இறுதி நாட்களில் மீன் வாங்குவதற்கு காசிமேடு பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேடு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!