தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் – சுங்கச்சாவடி நோட்டீஸ்!
தற்போது மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக வாகனம் ஓட்டி சென்றவர்கள் ரூ.2 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கச்சாவடி நோட்டீஸ்
தமிழகத்தில், மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை ஆயிரம் முறை கடப்பதற்கு 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசின் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, திருமங்கலத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்திருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில், உள்ளூரை சேர்ந்த அனைத்து வாகனங்களும் கடந்த 2 ஆண்டுகளாக இலவசமாக சென்று வரும் நிலையில் திடீரென்று மத்திய சுங்கச்சாவடி நிர்வாகம் வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 1000 முறைக்கு மேல் வாகனங்கள் இலவசமாக சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளதால் அதற்காக வாகன ஓட்டிகள் 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 17,092 பேருக்கு பாதிப்பு!
இது குறித்து பயனாளி ஒருவர் கூறுகையில், ‘திருமங்கலம் சுங்கச்சாவடியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் இதுவரைக்கும் இலவசமாக வாகனங்களை ஓட்டி சென்றதால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயமானது. கடந்த 2 வருடங்களாக விதியை மீறி வாகனங்களை அனுப்பியதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.